திருக்கோணேஸ்வரம் - ஆலய தரிசனம் (புகைப்படங்கள் )

Tuesday, November 24, 2009

கோட்டை வாயில் - திருமலை
திருமலைக் கோட்டையில் இருந்து நகரத்தின் தோற்றம்

இராவணன் வெட்டு


போர்த்துக்கேயரால் முன்னைய ஆலயம் இடிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் அதன் கற்தூண்

கருவறை - கோணேசலிங்கம்

தேவசபை - எழுந்தருளி மூர்த்திகள்

சமயகுரவர்கள்



தெட்சண கயிலாயம் எனப்போற்றப்படும் திருக்கோணேச்சரம் இலங்கையின் கிழக்குமாகாணத்திலுள்ள திருகோணமலையில் அமைந்திருக்கிறது.


தோற்றம் -

இவ்வாலயத்தின் தோற்றக்காலத்தை சரியாக நிர்ணயிப்பது கடினமாக இருப்பினும் 1624 இல் கோணேசர் கோவிலை இடித்தழித்த போத்துக்கேய தளபதி ( கொன்ஸ்ரான் ரைண்டீசா ) அவனுடைய அரசனுக்கு அனுப்பிய அறிக்கையின்படி 'மனுராசா /மாணிக்கராசா என்னும் மன்னால் கி.மு 1300 இல் இவ்வாலயம் அமைக்கப்பட்டதாக அறியக்கிடைக்கிறது.

உறுதிப்படுத்தப்படாத பல ஆய்வுகளும் , கற்பனைப் புனைவுகளும் ,சமகால நிகழ்வுகளும் ஆலயத்தின் தொன்மைதனை அறிவியல் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டிய அவசியத்தைச் சிட்டி நிர்க்கின்றன.


ஆலய மூர்த்தி - கோணேஸ்வரர்
இறைவி - மாதுமையம்பாள்
தீர்த்தம் - பாபநாசதீர்த்தம்
தலவிருட்சம் - கல்லால்




வரலாற்றுச்சுருக்கம்



இராமாயண காலம் - இராவணனின் வழிபாட்டுத்தலமாக இவ்வாலயம் குறிப்பிடப்படுகிறது.


யாழ்ப்பாண வைபவமாலை - கி.பி 436 -சோழமன்னன் வரராமதேவனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் ஆலயத்தை புனருத்தானம் செய்தான்.

வாயு புராணம் - கி.பி 5

தேவாரத் திருப்பதிகம் - கி.பி 7 திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலம்.

திருக்கோணேச்சரம் கி.பி 1624 இல் போத்துக்கீச தளபதி கொன்ஸ்ரன்டைன் டிசா என்பவனால் கொள்ளையடித்து,இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் இந்நிகழ்வு பற்றி முன்னமே அறிந்துகொண்ட அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும் ,காடுகளிலும், மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடு இயற்றி வந்தனர்.


1963
ம் ஆண்டளவில் இப்போதுள்ள ஆலயம் புதிதாக நிர்மானிக்கப்பட்டது.



விழாக்கள்



சிவராத்திரிவிழா சிறப்பாக ஆனுஷ்டிக்கப்படும்.



நகர்வலம்

சிவராத்திரிக்கு அடுத்த நாள் மாதுமையம்பாள் சமேத கோணேசப்பெருமான் நகர்வலத்துக்குப் புறப்படுவார். இரவில் நகர்வலம் இடம்பெறும். முதல்நாள் சிவன்கோவிலிலும் , இரண்டாம் நாள் காளிகோவிலிலும் தங்கி மூன்றாம் நாள் ஆலயம் திரும்புவார்.



மகோற்சவம்

பங்குனி உத்தரத்தில் கொடியேறி 18 நாட்களுக்கு மகோற்சவம் நடைபெறும்.



தெப்பத்திருவிழா

சுவாமி தெப்பத்தில் ஆரோகணித்து கோணமலையைச் சுற்றி சமுத்திரத்தில் வலம்வரும் நிகழ்வு இங்கு விசேசமானதாகும்.




Read more...

இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை

Thursday, November 19, 2009

(இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை)


(கல்வெட்டுக்கள்)

(விலையுயர்ந்த ஆபரணங்கள், முக்கியமான பொருட்கள் என்பனவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படுத்தியதாகக் கருதப்படும் பொருட்கள்)

(நீர்த் தொட்டி)

(மருத்துவத் தொட்டி)


திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசம் இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை. இதனுடைய வரலாற்றுப் பின்னணி அறியப்படவேண்டியதாகும்.


திருகோணமலையில் இந்து - பௌத்த மத முரண்பாடு கி.பி 3ம் நூற்றாண்டில் மகாசேனன் திருக்கோணேச்சரத்தை அழித்து கோகர்ண விகாரையை நிறுவ முற்பட்டதுடன் தீவிரம் பெறுகிறது.


'மகாசேனனின் துன்புறுத்தல் காரணமாக தற்காலிகமாகவே இந்து ஆலயங்கள் அழிக்கப்ட்டது. பௌத்த மதம் இந்து மத்ததுடன் போட்டி போட்ட போதும் பௌத்த மதம் துறைமுக நகரான திருகோணமலையில் இருந்து பின்வாங்க வேண்டி இருந்தது.' என்ற பேராசிரியர் சேனக பரணவிதானவின் கூற்றும், 'சோழர்கள் இலங்கையில் பல பௌத்த பள்ளிகளை அழித்ததார்கள்' என்ற சூளவம்சத்தின் கூற்றும் அக்காலத்தில் இருந்த மதமுரண்பாட்டை விளக்குவதாக இருக்கிறது.



வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளியின் தோற்றம் பற்றிய தெளிவான வரலாற்றுத் தகவல்கள் இல்லையாயினும் , இது சோழருடைய படையெடுப்புக்கு( 10 ம் நூற்றாண்டு) முன்னமே இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.


சோழருடய ஆட்சியின் கீழ் திருகோணமலை வந்தபின் இதன் பெயர் இராசராசப் பெரும் பள்ளி என சோழ ஆட்டசியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கிடைக்கப் பட்ட அதிகளவான அறக்கொடைச் சாசனங்கள் தமிழ் மொழியில் இருப்பதும் , சோழ ஆட்சியாளர்களால் இவ்விகாரை பாதுகாக்கப்பட்டு, ஆதரவளிக்கபட்டமையையும் ( இராசராச சோழன் 84 பசுக்களைத் தானம் செய்தார் - வரலாற்றுச் சாசனம்) வைத்துப் பார்க்கும் போது வெல்கம் விகாரை தமிழ் பௌத்த துறவிகளால் நிர்மானிக்கப்பட்டு , நிர்வக்ககப்பட்டு வந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.



Share/Save/Bookmark


Read more...

உதய தரிசனம் - புகைப்படங்கள்

Thursday, October 29, 2009



பதினேளுவருடங்களுக்குப் பின்பாக தம்பலகாமத்திலுள்ள எமது வீட்டில் இருந்து தரிசித்த உதயம் உங்கள் பார்வைக்கு.

இறுதியாகவுள்ள மூன்றுபடங்களும் கிண்ணியாவிலுள்ள சிறிய பாலத்தருகில் எடுக்கப்பட்டது.



Share/Save/Bookmark



Read more...
Blog Widget by LinkWithin

  © Free Blogger Templates Nightingale by Ourblogtemplates.com 2008

Back to TOP