இலங்கையில் உள்ள சிவாலயங்களில் திருக்கோணேச்சரம் நீண்ட, தொடர்ச்சியான தலபுராண வரலாற்றைக் கொண்ட
சிவத்தலமாகும். வாயு புராணம், திருஞானசம்பந்த மூர்த்தி
நாயனாரின் தேவாரப் பதிகம், அப்பரும், சுந்தரரும்
திருக்கோணேச்சரம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள தேவாரப் பாடல்கள், பெரிய புராணம் போன்றவற்றில் திருக்கோணேச்சரத்தின் தலச் சிறப்பு விரிவாக
பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் மச்சகேஸ்வரம் என்ற பெயராலும்
அழைக்கப்பட்ட திருக்கோணேச்சரம் தேசத்துக் கோயிலாக முன்னைய காலங்களில்
சிறப்பித்துக் கொண்டாடப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.