Sunday, June 13, 2010

"ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" - "Integrated Tsunami Watcher Service"



என்ற கவிதைக்கு வந்திருந்த பின்னூட்டம் தேவை கருதி பதிவாக்கப்பட்டுள்ளது. அடிக்கடி சுனாமி வருவதாக செய்திகள் வருவதுண்டு. அந்த வேளைகளில் இந்த முகவரி http://www.iibc.in/itws/ நமக்கு துணைபுரியுமென நம்புகிறேன்.. திரு.Muhammad Ismail .H, PHD, அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

அன்புடன் ஜீவன்

பின்னூட்டம்.....

// இழப்புகள் பெரிதாய் வரும்வரை
புரிவதில்லை உயிர்இருப்புகளின் பெறுமதி //
.
நச் கவிதை மற்றும் கருத்துகள். இதில் கொடுமை என்னவென்றால் சுனாமி பற்றி 26 December 2004 -க்கு முன் இங்கு உள்ள நிறைய பேருக்கு தெரியாது. ஆதலால் யாரையும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உயிர், உடமைகளை காக்க முடியாமல் போனது.போதுமான கால அவகாசம் இருந்தும் இதை செய்ய இயலாமல் போனது. இதில் எங்களுக்கு அதிக குற்ற உணர்ச்சி உண்டு.
.
இப்ப நிலைமை அப்படியில்லை. செல்லிட பேசி (Cell Phone) வழியாக குறுந்தகவல் (SMS) அனுப்பி நமது இந்திய மற்றும் உலகின் கடற்கரை அருகே வசிக்கும் மக்களை காக்க நாங்கள் "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" - "Integrated Tsunami Watcher Service" யை இந்த சுனாமி தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இலவசமாக நடத்திக் கொண்டு வருகின்றோம். உண்மையில் உயிர் என்பதுதான் விலை மதிக்க முடியாத ஒன்று. மற்றவைகளுக்கு விலை உண்டு. அதன் இணையதள முகவரி http://www.iibc.in/itws/

with care and love,
Muhammad Ismail .H, PHD

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. அன்பின் தங்கராசா ஜீவராஜ்,

    தங்களின் பதிவிற்க்கு மிக்க நன்றிகள். தங்களின் இந்த காலத்தே செய்த உதவியால் பலரின் உயிர், உடமைகள் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு
    அதிகரித்து உள்ளது.நண்பர் பிகேபி வழியாக கிட்டதட்ட 150 நடப்பில் உள்ள செல்லிட பேசி (Cell Phone) எண்கள் கிடைத்தது. அதற்க்கு அடுத்ததாக நீங்கள் தான் இதைப்பற்றி பதிவிட்டு உள்ளீர்கள்.சமீபத்தில் இங்கே சுனாமி பற்றிய வதந்திகளை களைய இந்த சேவை உதவியது.நன்றி வணக்கம்.



    குறிப்பு : உங்களின் பின்னூட்டம் தான் எனது தளத்தின் முதல் மற்றும் கடைசி பின்னூட்டம். :))))


    with care and love,

    Muhammad Ismail .H, PHD,

    ReplyDelete
  2. நன்றி Muhammad Ismail .H, PHD,

    ReplyDelete
  3. "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" - "Integrated Tsunami Watcher Service"
    என்ற பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு அமைகிறது.... தகவல் தருபவர் - திரு.Muhammad Ismail .H, PHD,

    நீங்கள் உங்களின் செல்லிடப்பேசியை எடுத்து புதிய குறுந்தகவல் அனுப்பும் இடத்துக்கு (Write New Msg) சென்று அதில் ADD ITWS என தட்டச்சு செய்து அந்த குறுந்தகவலை +919842496391 என்ற எனது இந்திய எண்ணுக்கு அனுப்பினால் போதுமானது. நான் அதை தகவல் தளத்தில் பொறுப்பாக சேர்த்து விடுவேன். ஆனால் இதற்காக உங்களிடம் சர்வதேச குறுந்தகவலுக்கான கட்டணம் உங்களின் செல்லிடப்பேசி சேவை வழங்குனரால் வசூலிக்கப்படும். இது எளிமையான வழிமுறை. உடனே உங்களுக்கு Delivery Report -ம் வந்துவிடும். இதனால் 100% சரியாக உங்களின் செல்லிடப்பேசி எண் ITWS தகவல் தளத்தில் உடனடியாக சேர்க்கப்பட்டுவிடும்.




    இன்னொரு வழியானது உங்களின் செல்லிடப்பேசி எண்ணை மின்அஞ்சல் மூலமாக எனது gnuismail at gmail dot com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் அதை நான் எனது மின் அஞ்சலை பார்த்து உங்களின் செல்லிடப்பேசி எண்ணை ITWS தகவல் தளத்தில் சேர்த்துவிட்டு உங்களுக்கு பதில் மின் அஞ்சலும் அனுப்பி விடுவேன். ஆனால் இது உடனடியாக நடைபெறாது. நான் மின் அஞ்சலை பார்க்கும் போது தான் செய்ய இயலும். மேலும் தட்டச்சு தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதில் உள்ள வசதி சர்வதேச குறுந்தகவலுக்கான கட்டணம் கிடையாது. ஒரே சமயத்தில் நிறைய செல்லிட பேசி எண்களை எனக்கு அனுப்பலாம்.




    குறிப்பு - இணையதளத்தில் இடசேவை வழங்குபவர்கள் (Web Space Provider) நாங்கள் கேட்ட தனிநபர் தகவல்பாதுகாப்பை ( Data Privacy ) தர மறுத்து விட்டனர். பொதுவாக இணையத்தில் நேரடியாக ( Online ) சேமிக்கப்படும் தகவல்களில் உள்ள மின் அஞ்சல் முகவரிகள், செல்லிடபேசி எண்கள் மற்றும் முகவரிகள் மூன்றாம் நபருக்கு விற்க்கப்பட்டு அது எரிதம் (Spam) அனுப்ப பயன்படுத்தபடுகிறது. அதை தவிர்க்கவே நாங்கள் இந்த ஏற்ப்பாட்டை செய்துள்ளோம்.



    எந்தெந்த நாட்டிலுள்ளவர்கள் sms மூலம் இத்தகவலைப் பெறலாம்?


    இந்த பூமிப்பந்தில் உள்ள GSM and CDMA மற்றும் அதற்கு மேலுள்ள தொழில்நுட்பத்தில் இயங்கும் அனைத்து செல்லிடபேசிகளும் எங்களின் குறுந்தகவலை பெறலாம். அதில் 160 எழுத்துகளை குறுந்தகவலாக பெறக்கூடிய வசதி இருந்தால் போதும். இது செல்லிடபேசிகளில் உள்ள ஒரு அடிப்படையான வசதியாகும்.மேலும் விளக்கம் தேவையென்றால் என்னை எப்பொழுது வேண்டுமானலும் தொடர்பு கொள்ளலாம். விளக்கமளித்த வாய்பளித்தமைக்கு நன்றி.


    with care and love,--



    Muhammad Ismail .H, PHD,
    Chief Executive,
    Digital Net Services,
    India - 611 002.
    +91.98424.96391,+91.94420.93300,
    "Truth Always Triumphs,

    "http://gnuismail.blogspot.com/

    ReplyDelete