Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Wednesday, May 06, 2015

கந்தளாய்ப் பூதங்களின் கதை


08.06.1786 இல் தம்பலகாமத்தில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணமான ஒல்லாந்த ஆளுனர் அக்காலத்தில் தம்பலகாம மக்களிடையே பூதங்கள் தொடர்பாக இருந்த அச்ச உணர்வு பற்றி விபரித்திருக்கிறார். இந்தப் பூதங்களின் கதை சுவாரிசமானது. என்னறிவுக்கு எட்டியவரை இந்தப் பூதங்கள் தொடர்பான நம்பிக்கைகள் 1985 காலப்பகுதிவரை தம்பலகாம மக்களிடையே பரவலாக இருந்தது. பின்வந்த நாட்களில் புதிதாக உருவான இனவன்முறைப் பூதம் இந்தப் கந்தளாய்ப் பூதங்களின் கதைக்களை வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடவைத்துவிட்டது.

Thursday, March 28, 2013

வீரசிங்கம் விதானையார்

அட்வகேற்


‘அட்வகேற்’ ஆனந்தன்  காலை ஆராதனைகளை முடித்துக்கொண்டு தன் அலுவலகத்திற்குள் நுளைந்து தன்னைச் சந்திக்க வந்திருக்கும் வாடிக்கையாளர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களது பிரச்சனைகளை அலசி ஆராயத் தொடங்கினார்.

Wednesday, October 24, 2012

நகை சுமந்த நங்கையர்


“கோகிலா வருகிறாயா திருவிழாவுக்குப் போகலாம்” என்று பக்கத்துக் குடிசைக்காரி கனகம்மா கேட்டாள்.

“போகலாம் தான் கழுத்தில் ஒரு சிறிய சங்கிலி கூட இல்லாமல் எப்படியக்கா அவ்வளவு சனக்கூட்டத்திற்குள் போவது?”என்று கேட்டாள் கோகிலா.

Saturday, October 20, 2012

சிவப்புக் கோடுகள்

பாடசாலை

சுஜாத்தா தன் கையில் கட்டியிருந்த சிற்றிசனில் நேரத்தைச் சரிபார்த்துக் கொண்டே வீதியில் பார்வையைத் தெளித்தாள். தூரத்திலே அவள் பிரயாணம் செய்ய வேண்டிய ‘கிண்ணியா’ பஸ் வந்துகொண்டிருந்தது. அந்த ‘டிமோ’ பஸ்ஸில் முண்டியடித்து ஏறி ஒரு ‘சீற்றை’ பிடித்தவாறே‘சைனாபேக்கு’( China Bay ) ஒரு ‘டிக்கட்’ வாங்கிக் கொண்டு அப்பாடா எனப் பெருமூச்சு விட்டாள்.

Tuesday, October 16, 2012

மேகலாவின் காதலன்

thampalakamam

தம்பலகாமம் கோயில்குடியிருப்பில் கதிர்காமத்தம்பிப் போடியாரின் வளவில் ‘நெல்லுப்பட்டறை’ பிரித்து விவசாயிகள் விதைநெல் வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். போடியாரின் வளவு மாட்டு வண்டிகளும் மனிதர்களும் நிறைந்து காணப்பட்டது. சுப்பிரமணியம் என்ற நெற் செய்கையாளரும் போடியாரிடம்தான் வழக்கமாக விதைநெல் எடுப்பவர் ஆயினும் இம்முறை அவர் விதைநெல் வாங்க வரவில்லை. ‘என்ன காரணம். இம்முறை மணியம் விதைநெல் வைத்திருக்கிறானோ?’ என்று போடியார் எண்ணினார்.

Monday, October 15, 2012

அவர் திருந்தினார்

thampalakamam

மணி பிற்பகல் இரண்டு.
அந்தப் பையன் எதிர்பார்த்திருந்தபடியே பாடசாலை முடிவதைக்குறிக்கும் மணி அடித்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் பள்ளிக்கூடம் விட்டது. காலை எட்டு மணியிலிருந்து பிற்பகல் இரண்டுமணிவரை அந்தப்பாடசாலைக் கட்டிடத்திற்குள் அடைபட்டுக் கிடந்த தங்களிடம் ‘கணக்கென்றும்’ என்றும் ‘வாசிப்பு’ என்றும் ‘சுற்றாடல்’ என்றும் ஆசிரியர்கள் இடையிடையே வந்து அதிகாரத்தோரணையில் கஸ்டம் கொடுத்ததெல்லாம் நின்று இப்போது வீட்டுக்குப் போகிறோம் என்ற ஆனந்த உணர்வுடன் மாணவர்களும் மாணவிகளும் வீடுகளை நோக்கி வீதியில் துள்ளிக் குதித்துச் சென்று கொண்டிருந்தனர்.

Tuesday, October 02, 2012

கவிதைக்கு கிடைத்த பரிசு

கவிதைக்கு கிடைத்த பரிசு

குமரிப்பெண்கள் வாலிபர்களை எதிரும் புதிருமாகச் சந்திக்க நேர்ந்தால் வெட்கமடைந்து தலைகுனிந்து கால் பெருவிரலால் பூமியைக் கிளறிக்கொண்டிருப்பதுதான் இயல்பு. ஆனால் பெரிய அளவில் வாய்ச்சவடால் அடிக்கும் வாலிபச் சிங்கங்கள் கூட அழகான பெண்களின் மத்தியில் அகப்பட்டுக்கொண்டால் கூனிக்குறுகி கோணங்கித்தனமாக நடந்து கொள்வதைப் பரவலாகக் காணலாம்.

Sunday, September 23, 2012

நள்ளிரவில் அவளுக்குக் கிடைத்த துணைவன்

தம்பலகாமம்

இரவு பதினொரு மணி பௌர்ணமிக்கு முதல்நாள் ஆகையால் நிலவு பகலாய்க் காய்ந்து கொண்டிருந்தது. நித்திரை வராததால் சித்திரா பாயில் புரண்டுகொண்டு கிடந்தாள்.சித்திராவின் இளம் மனதைப் பலவிதமான இன்ப துன்ப நினைவுகளும் யோசனைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.