Showing posts with label சிறுவர் பாடல். Show all posts
Showing posts with label சிறுவர் பாடல். Show all posts

Wednesday, September 19, 2012

பாடம் பயில வாருங்கோ! - சிறுவர் பாடல்

பாடம் பயில வாருங்கோ

மாணாக்கரே! மாணாக்கரே!
வந்து கேளுங்கோ! உங்கள்
வாழ்வு மலர வழிகள் சொல்வேன்
கேட்டுச் செல்லுங்கோ!

Tuesday, September 11, 2012

தரணி போற்ற வாழலாம்

தம்பி

கத்தி கொண்டு களங்கள் பல
கண்ட காலம் போச்சு
புத்தி இன்று போரிலே
புதுமை காண லாச்சு.

Tuesday, August 28, 2012

உயர்ந்த மனிதன் ஆகலாம்

tamil children songs

உலகிலுள்ள இயற்கையில்
உயர்ந்த பண்பு உண்டு பார்!
உணர்ந்து நீயும் கைக்கொண்டால்
உயர்ந்த மனிதன் ஆகலாம்.

Wednesday, August 22, 2012

புரிந்து உலகில் வாழுவோம்

Children-song

பந்து விளையாடலாம்
பாய்ந்து ஓடி வாருங்கள்
சிந்துகின்ற வியர்வையில்
தேகம் பல மாகுமே!

Monday, August 20, 2012

அம்மா

amma

அம்மா எங்கள் அம்மா
அன்பு காட்டும் அம்மா
சும்மா என்னைத் தூக்கி
துயரம் போக்கும் அம்மா.

Monday, August 13, 2012

எங்கள் ஆசான்


எங்கள் ஆசான்

எங்கள் ஆசான் இனியவர்
எதற்கும் அஞ்சா நெஞ்சினர்
கண்கள் போலும் கல்வியைக்
கற்றுத் தரும் பண்பினர்

Thursday, August 02, 2012

சிந்தனையைப் போற்றுவோம்


காக்கை ஒன்று மரத்திலே
முட்டை விட்டுக் காத்தது
பார்த்துப் பாம்பு ஒன்று வந்து
கொத்திக் குடித்துக் சென்றது.

கணினி

கணினி என்ற கருவி யொன்று
கருத்தில் தோன்றுதே இதைக்
கவனி என்று உலகம் இன்று
பரணி பாடுதே.

மனிதனும், மிருகமும்


உணவு தேடிக் காக்கையார்
ஊரைக் கூட்டி உண்ணுவார்
பணத்தைத் தேடி மனிதர் நாம்
பதுக்கி வைத்து வாழ்கிறோம்.

வாழ்வாங்கு வாழும் வழி


விடியற்காலை நாலு மணிக்கு
விழிக்க வேண்டும் தோழரே
கடிதிற் காலைக் கடன்கள் முடித்து
கடவுள் பாதம் தொழுவமே.

வேளை தோறும் பண்புகள்


பாலர் நாங்கள் கூடி நின்று
பாடிப் பாடி ஆடுவோம்
தோழர் ஒன்றாய்க் கூடுவோம்
சுறு சுறுப்பாய் ஓடுவோம்

உனக்குள் ஒன்றுண்டு



உனக்குள் ஒன்றுண்டு இதை
உணர்வாய் நீ நன்று
உனக்குள் உள்ள ஒன்றே இந்த
உலகில் எங்குமுண்டு

முழு மனிதராகுவோம்


இந்து, யேசு, புத்தர், என்று
எதற்குச் சண்டை தோழரே
இறைவன் ஒன்று என்னும் தீபம்
ஏற்ற வேண்டும் எங்குமே

வாழும் வழி தெரியணும்


ஆலமர நிழலிலே
அழகு மிகு பூனையார்
கோலமிடும் மங்கை போல்
குனிந்து நின்று முகர்ந்தனர்

கணிதம் கற்று உயர்வாய்…


கணக்கு வரா தென்று
கவலைப்படும் மகளே
கருத்து ஒன்று சொல்வேன் நீ
கவனமாகக் கேளு

ஆண்டவனைக் கண்டதுண்டா?


ஆண்டவனைக் கண்டதுண்டா?
அருமையண்ணா கேட்டனன்
ஆகா உண்டே என்று அவன்
அருமைத் தங்கை கூறினள்

கப்பல் துறை


கப்பல் துறை எங்கள் துறை
கன்னித் தமிழர் வாழ்ந்த துறை
கலம் செலுத்தி தமிழ் இளைஞர்
காவியம் படைத்த துறை

அன்பு


அன்பு செய்வோம் பிள்ளைகாள்
ஆகா ஓடி வாருங்கள்
அன்பு தெய்வ மாகுமே
அதனை அறிந்து போற்றுவோம்

எங்கள் ஊர்




தம்பை ஊர் எங்கள் ஊர்
தமிழர் ஒன்றாய் வாழும் ஊர்
தும்பை மலர் சூடும் கோணைத்
தூயவன் வாழ் தம்பை ஊர்

வளங் கொழிக்கும் எங்கள் ஊர்
வயல்கள் சூழ்ந்த தம்பை ஊர்
கந்தளைக் குளம் பாய்ச்சும்
கழனி சூழ்ந்த தம்பை ஊர்

ஆழ் கடலைப்பாருங்கோ


ஆழ் கடலைப்பாருங்கோ
ஆகா என்ன அழகிது
நீல நிறமானது
நீண்டு பரந்து தோன்றுது