Showing posts with label தேவரடியார். Show all posts
Showing posts with label தேவரடியார். Show all posts

Wednesday, July 19, 2017

நங்கை சானியும், எழு தேவரடியார்களும் - புகைப்படங்கள்

 இது குளக்கோட்டன் சமூகம்

2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சோழர்கால கல்வெட்டுக்களைக் காண்பதற்காக கந்தளாய்ச் சிவன் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தற்போது சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் சிவன் ஆலயத்தில் ஒரு புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களை பாதுகாத்து வருகிறார்கள் அவ்வூர் மக்கள். அவற்றில் சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் , கல்வெட்டுக்கள் என்பன அடங்குகின்றன.