திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான பாட்டாளிபுரத்திற்கு பயணிக்கும் வாய்ப்பு இருவாரங்களுக்கு முன்னர் வாய்த்திருந்தது. சிலவருடங்களுக்கு முன்னர் மருத்துவ முகாம் ஒன்றிற்காக நண்பன் Dr. இளங்கோவுடன் பாட்டாளிபுரம் சென்றுவந்ததன் பின்னர் இதுவே எனது இரண்டாவது பயணம்.