1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டாக்டர் பாலேந்திரா அவர்கள் போர்த்துக்கல்லில் உள்ள லிஸ்பன் அருங்காட்சியகங்களில் இருந்த திருக்கோணேச்சரம் சார்ந்த வரைபடங்களையும், சித்திரங்களையும் சேகரித்தார். அவை போர்த்துகீசரால் திருக்கோணேச்சரம் அழிவடைவதற்கு முன்னர் அவர்களால் வரையப்பட்டவை.
