கோணேசர் கல்வெட்டில் வருகின்ற உரைநடைப் பகுதியில் நான்கு வம்சங்களைச் சேர்ந்த வன்னிபங்களின் பெயர் பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திருகோணமலைப் பிராந்தியத்தின் நான்கு வன்னிமை பிரிவுகளில் தலைவர்களாக விளங்கிய வெவ்வேறு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
