Showing posts with label 1941. Show all posts
Showing posts with label 1941. Show all posts

Monday, November 28, 2016

ஈழ , சோழ மண்டல பேச்சுத்தமிழ் (1941) - சுவாமி விபுலானந்தர்


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சுவாமி விபுலாநந்தர் பிறந்தார். 1912ஆம் ஆண்டுகளில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமைபுரிந்த இவர் 1915 ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 இல் அறிவியலில் பட்டத்தைப் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார்.