தம்பலகாமம் குடாக்கடல் பண்டைய துறைமுகங்களில் ஒன்றாக இருந்தது. அது துறைமுகமாகச் செயற்பட்டது தொடர்பில் ஐரோப்பியர் காலத்து பதிவுகளே அதிகளவில் கிடைக்கின்றன. தம்பலகாமம் குடாக்கடலின் கப்பல்துறைக் கிராமப்பகுதியில் முன்னர் துறைமுகம் ஒன்று இருந்ததற்கான அழிபாடுகள் காணக் கிடைத்ததாக 1970 களில் கப்பல்துறைக்காட்டில் வேட்டையாடச் சென்றவர்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது. சிப்பித்திடல், முள்ளியடிப் பகுதிகள் எதிர்காலத்தில் களஆய்வு செய்யப்படுமாக இருந்தால் மேலும் பல விடயங்கள் வெளிவரக்கூடும்.
