Showing posts with label Toponymy. Show all posts
Showing posts with label Toponymy. Show all posts

Tuesday, November 07, 2017

‘தம்பலகாமத்தில் ஒரு கல்வெட்டு’ - பேராசிரியர் சி.பத்மநாதன் 2005

தம்பலகாமம் கல்வெட்டு

பொலநறுவைக் காலத்துப் படைப்பற்று (மறைந்து போன சிலாசாசனம் ) என்னும் உபதலைப்புடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்ட ‘தம்பலகாமத்தில்  ஒரு கல்வெட்டு’என்ற இக்கட்டுரை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2005 ஆம் ஆண்டுக்கான புரட்டாதி மாத பண்பாடு என்ற சஞ்சிகையின் முதல் கட்டுரையாக வந்திருந்தது. வாசித்து, வாசித்து மனப்பாடம் ஆகிப்போன அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் கீழே.

Monday, September 16, 2013

தம்பலகாமம் VS தம்பலகமம் - இடப்பெயர் ஆய்வு நிறைவுப் பகுதி

தம்பலகாமம்

தம்பை நகர் என்று திரிகோணாசலப்புராணம் சிறப்பித்துக்கூறும் கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் நீர்வள, நிலவளச் சிறப்பைக் கொண்டமைந்த தம்பலகாமம் என்னும் கிராமத்தின் இடப்பெயர் ஆய்வின் ஒரு பகுதியாக ‘தம்பலகாமம்’ என்னும் ஊரின் வரலாற்றுத் தொன்மைதனை இதுவரை சுருக்கமாகப் பார்த்தோம்.

Thursday, September 12, 2013

'' தம்பலகாமப்பற்று வன்னிமையும் , தேசவழமையும் '' - இடப்பெயர் ஆய்வு பகுதி 6

Thampalakamam

1815 ஆம் ஆண்டு பிரதமநீதியரசர் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஒல்லாந்து அரசாங்கம் தமிழர் வாழும் பகுதிகளுக்கென தொகுத்து சட்டமாக்கிய தேசவழமைகளின் பிரதிகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்தார். அவற்றின் பிரதிகள் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஆவணச் சுவடிகள் என்ற தொகுப்பாக வெளிவந்தன.  தம்பலகாமப்பற்று வன்னிமை பற்றியும் ,அங்கிருந்த தேசவழமை பற்றியும் அறிய உதவும் வரலாற்றாதாரங்களாக இவ்வாவணம் விளங்குகின்றது.

Thursday, August 29, 2013

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 5

குளக்கோட்டன்

திருகோணமலை வரலாற்றில் மன்னர்களின் நேரடி ஆட்சி முறை தளர்ந்தபிற்பாடு நிலமானியமுறை சார்ந்த வன்னியர் ஆட்சி தொடங்கியதெனலாம். இதனைப் பல வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. குளக்கோட்டனின் அரச பிரதானியாகிய தனியுண்ணாப் பூபாலவன்னியர் என்பவர் மூலம் திருகோணமலையில் வன்னியர்களின் ஆட்சி தொடங்கியது என்றாலும் குளக்கோட்டன் காலத்திற்கு முன்னரும், பின்னரும் இங்கு அவை தொடர்ந்திருந்திருக்கிறது எனச்சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

Wednesday, August 21, 2013

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 4

கலிங்க மாகன்
கலிங்க மாகன்
முதலாம் விஜயபாகு ( கி.பி 1055 - 1110 )மன்னன் காலத்தில் கந்தளாய் விஜயராசச் சதுர்வேதி மங்கலம் என்றும் அங்குள்ள சிவன் கோவில் விஜயராஜ ஈஸ்வரம் என்றும் அழைக்கபட்டது. கி.பி 1097 இல் நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை வர்ணிக்கிற சாசனம் முதலாம் விஜயபாகுவின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டதாகும்.(1)

Thursday, August 15, 2013

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 3

தம்பலகாமம்

தொல்பொருள் சாசனங்களுடன் ஒப்பிடுகையில் இடப்பெயர்கள் பெரும்பாலும் தனித்திறமையோ, நுணுக்கமோ இன்றி பொதுமக்களால் படைக்கப்படுபவை. எனவே அவை மக்களின் மொழிவழி எண்ணங்களை மிகச்சிறப்பாக உணர்த்தி நிற்கின்றது.

Tuesday, July 30, 2013

“காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடப்பெயர்கள் - தம்பலகாமம் - பகுதி 2

 தம்பலகாமம்

வெவ்வேறு வகையான உருவங்களைக் கொண்ட ஊர்ப்பெயர்களில் மனித இனத்தின் அனுபவம் பொதிந்துள்ளது. எனவே இடப்பெயர்கள் எல்லாம் மனிதனின் மொழிமரபையும் பண்பாட்டையும் வளர்க்கின்றன. இதனடிப்படையில் ஊர்களை இனங்காணுவது மனித இனத்தின் முக்கிய நடத்தையை உருவாக்குகின்றது.(1) என்று சொல்கிறார் திரு.ஆர். ஆளவந்தார்.

Thursday, July 25, 2013

இலங்கைத் தமிழர் இடப்பெயர் ஆய்வில் - தம்பலகாமம் - பகுதி 1

தம்பலகாமம்

‘எங்கே வரலாறு மௌனம் சாதிக்கத் தொடங்குகின்றதோ அங்கே இடப்பெயர்களும், ஊர்ப்பெயர்களும் தம் வாய்திறந்து பேசத்தொடங்கும்’ என்கிறார் ஊர்ப்பெயர் ஆய்வின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் திரு.ஆர். ஆளவந்தார் அவர்கள்(1). உலக கவனத்தையீர்த்த இந்த இடப்பெயராய்வு (Toponymy )18 ஆம் நூற்றாண்டு முதல் ஒரு அறிவியல் துறையாக அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.