இக்கதையை விஸ்வாமித்திரர் இராமாயணத்தில் குலமுறை கிளர்த்தும் படலத்தில் இராம இலட்சுமணர்களுக்குக் கூறுகிறார். இதனால் தொடர் முயற்சிகளுக்குப் பகீரத முயற்சி என்றும் கங்கைக்குப் பகீரதி என்றும் காரணப் பெயர்கள் வந்தன.
இந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வளர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக விளங்கினர். சங்கம் அமைத்துப் புலவர்களுடன் தாங்களும் உடனிருந்து ஆராய்ந்து இவர்கள் தமிழ் வளர்த்தனர் என்பதைத் தமிழ் உலகம் நன்கறியும்.
தம்பலகாமம் தந்த திருக்கோணமலையின் வயலின் இசைக் கலைஞர்
சங்கீத பூஷணம் வல்லிபுரம் சோமசுந்தரம்
திருக்கோணமலை மாவட்டத்தின் இசைத்துறையில் குறிப்பாக வயலின் வாத்திய இசையில் வறட்சியை போக்கிய தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திருகோணமலையின் முதல் வயலின் இசைக்கலைஞன் திரு. வல்லிபுரம் சோமசுந்தரம் என்றால் அது தம்பலகாம மண்ணுக்கே பெருமை.
இவர் வயலின் கலைஞராக திருகோணமலையில் கால்பதிக்குமுன் இங்கு நடைபெற்ற கதாப்பிரசங்கம், இசைக்கச்சேரிகள், போன்ற இசைநிகழ்ச்சிகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்துதான் பக்கவாத்தியக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். சோமசுந்தரம் அவர்களின் வருகைக்குப்பின் இந்த வறட்சி நீக்கப்பட்டுள்ளதென்றால் அது மறுக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாததொன்றாகும்.
இந்த நில உலகில் பரிசுத்தமான,தூய்மையானவைகள் செடிகளில் அன்றாடம் மலரும் பூக்களே. எனவேதான் மனிதர்கள் இறைவனுக்குப் பூக்களை அர்ச்சித்து வணங்குகின்றனர். ஆயினும் இந்த மலர்களை விட இறைவனுக்கு மிகவும் விருப்பமான பொருள் மனிதனிடம் இருக்கின்றது என்று சுவாமி விபுலானந்தர் பின்வருமாறு கூறுகின்றார்.
இது கிராமத்தில் பூத்த ஒரு சரித்திரக் குறுநாவல். எமது இருபதாவது வெளியீடு. இதன் ஆசிரியர் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் ஒரு முதுபெரும் எழுத்தாளர், பழம்பெரும் ஊடகவியலாளரும்கூட.
முழு நிலவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கின்ற செயல் இது என்றே எனக்குப் படுகின்றது. முற்றிலும் பொருத்தமான முறையில், பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் என்று வருணிக்கப்பட்டுள்ள தம்பலகாமம் வேலாயுதம் ஐயா எந்தளவுக்கு மண்ணின் மைந்தனாக வாழ்ந்தார் என்பதை அவரது எழுத்துலக வாழ்க்கை தெளிவாகக் காட்டுகின்றது.