Thursday, December 25, 2014

வெள்ள அனர்த்தம் - தம்பலகாமம் - புகைப்படங்கள்


சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில தினங்களாக நாட்டில் பெய்து வரும் அடை மழையினால்16 மாவட்டங்களிலுள்ள 6 இலட்சத்து 47ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 75,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Wednesday, December 24, 2014

ஒளிவிழா - அன்னை திரேசா இல்லம் - புகைப்படங்கள்


ஆர்ப்பரிக்கும் கடல் அலைமோதும் திருகோணமலையில், அழகான லிங்கநகர்ப்பகுதியில், இயற்கை வனப்பு நிறைந்த இடத்தில் அமைந்திருக்கிறது அன்னை திரேசா இல்லம். வெள்ளம் ஏறுவதும் வற்றுவதுமாக இருக்கும் மட்டிக்களி கடலின் அரவணைப்பில் இருக்கும் இந்த இல்லத்தில் 57 சொந்தங்களால் கைவிடப்பட்ட முதியோர்கள் பராமரிக்கப்படுகிறார்கள்.

Tuesday, December 16, 2014

கலாபூசணம் வே.தங்கராசா கௌரவிப்பு நிகழ்வு - ( புகைப்படங்கள், காணொளி)


திரு.வேலாயுதம் தங்கராசா அவர்கள் திருகோணமலையில் உள்ள தம்பலகாமம் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஓய்வு பெற்ற அதிபர், வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் மரபுவழி அறக் காவலர்களில் ஒருவராகக் ‘கங்காணம்’ என்னும் தொழும்பு முறையினைச் செய்பவர்.

Thursday, November 20, 2014

கேணிப்பித்தன், சம்பூர் ஸதீஸ் கௌரவிப்பு - புகைப்படங்கள்


2014 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியருக்கான விருது வழங்கும் நிகழ்வு அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலையில் நடைபெற்றது. அதில்

திருகோணமலை மாவட்ட கிராமிய பாடல்கள் - கேணிப்பித்தன் ச.அருளானந்தம்
சம்பூர் பிரதேசத்தின் தொன்மை - Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார்

விருது பெற்ற இரு நண்பர்களுக்கும் ஜீவநதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

Wednesday, November 19, 2014

இது குளக்கோட்டன் சமூகம் - புகைப்படங்கள்

இது குளக்கோட்டன் சமூகம்

“ஜீவா நான் ஊருக்கு வந்துவிட்டேன்” என்ற உற்சாகமான குரல் எனது அன்றைய நாளைச் சந்தோசத்துடன் தொடங்கி வைத்தது. நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த அந்தக் குரலுக்குரியவர் கலாநிதி  சரவணபவன் அவர்கள்.  திருகோணமலையின் பண்டைய வரலாற்றினை இலகுதமிழில் கால ஒழுங்குக்கு அமைய ‘வரலாற்றுத் திருகோணமலை’, ‘காலனித்துவ திருகோணமலை’ என்ற இருநூல்களை ஒழுங்குபடுத்தப்பட்ட வரலாற்று ஆவணங்களாக நமக்கு உருவாக்கித்தந்தவர். பார்ப்பதற்கும், பழகுவதற்கும் எளிமையான, இனிமையான மனிதர்.

சிவநய அறநெறிப்பாடசாலை நூலக அங்குராட்பணம் - புகைப்படங்கள்

சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை

கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக சிவநய அறநெறிப்பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50 மாணவர்கள் மூன்று தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் கல்விபயின்று வருகிறார்கள். இப்பாடசாலை ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் 12 மணிவரை நடாத்தப்படுகிறது. பலசிரமங்களுக்கு மத்தியில் மாணவர்களின் ஆர்வமான கலந்துகொள்ளலுடன் இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Friday, October 03, 2014

திருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மையம் - பகுதி - 1



வரலாற்று முக்கியத்துவம் கொண்ட திருக்கோணேச்சர (திருக்கோணேஸ்வரம்)  ஆலயம் தொடர்பாக இணையவழி கிடைக்கும் வரலாற்று நூல்களை ஒருங்கிணைப்பதற்கான முன்னகர்வு இதுவாகும். www.noolaham.org  இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் திருக்கோணேச்சர ஆலய வரலாற்றுடன் தொடர்புடைய நூல்கள் சில.