Showing posts with label திருக்கோணேஸ்வரம். Show all posts
Showing posts with label திருக்கோணேஸ்வரம். Show all posts

Tuesday, October 31, 2023

1600களில் திருக்கோணேச்சர ஆலயச் சூழல்.

 

இளையவர்கள் 400 வருடங்களுக்கு முந்திய திருக்கோணேச்சர ஆலயச் சூழலைப் புரிந்து கொள்வதற்கான செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய காட்சிப் பதிவு. 

நட்புடன் ஜீவன்.

Friday, October 20, 2023

திருக்கோணேச்சரம் - Thirukoneswaram temple

 


400 வருடங்களுக்கு முந்திய திருக்கோணேச்சரத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கும் முயற்சி.
An attempt to design the Thirukoneswaram temple in the 17th century (1600) with the help of artificial intelligence. நட்புடன் ஜீவன்.

Saturday, October 08, 2022

திருக்கோணேச்சரத்தில் பணியாற்றிய தேவரடியார்கள்

கோயில் திருப்பணிக்காக தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தேவரடியார்கள். பண்ணிசை பாடுதல், நடனமாடுதல்,இசைக்கருவிகளை இசைத்தல் என்பன தேவரடியார்களின் முக்கிய பணி என்று கருதப்பட்டாலும்  ஆலய வளாகத்தை சுத்தப்படுத்துதல், பூமாலை கட்டுதல், விளக்கெரித்தல் சில சமயம் மடப்பள்ளி வேலைகளில் உதவி செய்தல் போன்ற பல்வேறு பணிகளை தேவரடியார்கள் மேற்கொண்டார்கள்.

Wednesday, March 11, 2015

திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில் திருக்கோணேஸ்வரம். பகுதி 3


இதைத் தொடர்ந்து சம்பந்தர் தான் பாடிய பதிகங்களின் எட்டாவது பாடல் இராவணன் பற்றிய குறிப்பினை கொண்டிருக்கும் வகையில் அமைத்திருக்கிறார். இராவணன் தமிழ்வீரன் என்பதும், அவன் சிறந்த சிவபத்தனாகத் திகழ்ந்தான் என்பதும் புராணக் கதைகள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் செய்தியாகும். இப்புராணக் கதை மரபினை பதிகங்களில் பயன்படுத்தும் வழக்கினை ஆரம்பித்து வைத்தவர் சம்பந்தப் பெருமானாகும். இது பிற்காலத்தில் நாயன்மார்கள் தமது பாடல்களில் இவற்றை இணைத்துக் கொள்ள பெரும் உதவியாக இருந்தது.

பகுதி - 1  வாசிக்க.... திருக்கோணேச்சரம்  2015 - புகைப்படங்கள்
பகுதி - 2  வாசிக்க...   'கோணமாமலை அமர்ந்தாரே'  2015 - புகைப்படங்கள்

திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில் திருக்கோணேஸ்வரம். பகுதி 2


பெரும்பாலான தமிழ் நாட்டுத் தலங்களை தரிசித்த ஞானசம்பந்தர்  அவ்வாலயச் சூழலின் அழகினைப் பாடல்களிலமைத்து அவ்வாலயம் பற்றிய விம்பங்களைப் பாடுவோர் மனத்தில் பதித்திடும் வகையில் தனது பதிகங்களைப் பாடியுள்ளார். அதுபோலவே கோணேசர் பதிகத்திலும் அடுத்துவரும் வரிகள் திருக்கோணேசர் ஆலயச் சூழலின் இயற்கை அழகினை வர்ணிப்பதாக அமைத்திருக்கிறார் சம்பந்தர்.

பகுதி - 1  வாசிக்க.... திருக்கோணேச்சரம்  2015 - புகைப்படங்கள்

Sunday, March 08, 2015

திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில் திருக்கோணேஸ்வரம். பகுதி 1


வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் ) என்ற பதிவு 2013 இல் எழுதப்பட்டபோது  திரு.யோகன் பாரிஸ் (Johan-Paris) அவர்கள் திருகோணமலைத் திருப்பதிகம் தொடர்பில் விளக்கம் கேட்டிருந்தார்.

Friday, October 03, 2014

திருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மையம் - பகுதி - 1



வரலாற்று முக்கியத்துவம் கொண்ட திருக்கோணேச்சர (திருக்கோணேஸ்வரம்)  ஆலயம் தொடர்பாக இணையவழி கிடைக்கும் வரலாற்று நூல்களை ஒருங்கிணைப்பதற்கான முன்னகர்வு இதுவாகும். www.noolaham.org  இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் திருக்கோணேச்சர ஆலய வரலாற்றுடன் தொடர்புடைய நூல்கள் சில.

Monday, September 22, 2014

தென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) புகைப்படங்கள் - 2


இராஜரெட்ணம் நடனாலயம் மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா  என்னும்   திருக்கோணேஸ்வர வரலாற்று நாட்டிய நாடகம் புனித மரியாள் கல்லூரியில் அரங்கேற்றப்பட்டது.  கன்னியா லலிதாம்பிகை தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசை அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார். திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்சி போக்கையும் 125 நடனமாணவிகள் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.

தென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) - புகைப்படங்கள் - 1


இராஜரெட்ணம் நடனாலயம் மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா  என்னும்   திருக்கோணேஸ்வர வரலாற்று நாட்டிய நாடகம் புனித மரியாள் கல்லூரியில் (06.09.2014) அரங்கேற்றப்பட்டது.  கன்னியா லலிதாம்பிகை தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசை அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார். திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்சி போக்கையும் 125 நடனமாணவிகள் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.

Tuesday, June 10, 2014

1970 களில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' - (கணேசன் சந்தி) - புகைப்படங்கள்

Koneswaram1970

1970  ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலையில் 'திருக்கோணேஸ்வர  ஆலய நகர் வலம்'  இடம்பெறுகையில் திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள கணேசன் சந்தியில் அமைக்கப்படும் அலங்கார வளைவுகளின் பதிவுகள் சில.

Tuesday, February 11, 2014

'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள் 1

திருக்கோணேஸ்வரம்

வரலாற்றுப் பெருமைமிக்க திருக்கோணேஸ்வரம் சார்ந்து இதுவரை வெளிவந்த வரலாறு உள்ளிட்ட ஆன்மிக, இலக்கியங்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும், கல்விக்கான மூன்றாம் கட்ட நிதியுதவி வழங்கும் வைபவமும். 09.02.2014.

'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள் 2

திருக்கோணேஸ்வரம்

கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைச் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம் அவர்கள் ‘நூல் அறிமுகவுரையை” ஆற்றினார்.

Thursday, February 06, 2014

'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு அழைப்பிதழ்

Koneswaram

'திருக்கோணேஸ்வரம்' -  நூல்

1000 பக்கங்களை உடைய இந்நூல் ஆலயம் சார்ந்த தோத்திரங்கள், புராணங்கள், வரலாறு, வரலாற்று ஆய்வுகள், பத்திரிகைச் செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், நிழற்படங்கள் எனப்பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய தொகுப்பாகும்.

Thursday, November 21, 2013

திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் )

koneswaram

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்கள்
கிழக்கே                    திருக்கோணேஸ்வரம்
வடமேற்கே            திருக்கேதீஸ்வரம்
வடக்கே                   நகுலேஸ்வரம்
மேற்கே                   முனீஸ்வரம்
தென்கிழக்கே        தொண்டீஸ்வரம்
என்பனவாகும்.

Wednesday, July 03, 2013

திருகோணமலையை ஆண்ட வன்னிபங்கள் பற்றிய வரலாற்றாதாரங்கள்

திருகோணமலையை ஆண்ட வன்னிபங்கள் பற்றிய வரலாற்றாதாரங்கள்
குளக்கோட்டன்
திருகோணமலை வரலாற்றில் மன்னர்களின் நேரடி ஆட்சி முறை தளர்ந்தபிற்பாடு நிலமானியமுறை சார்ந்த வன்னியர் ஆட்சி தொடங்கியதெனலாம். இதனைப் பல வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. குளக்கோட்டனின் அரச பிரதானியாகிய தனியுண்ணாப் பூபாலவன்னியர் என்பவர் மூலம் திருகோணமலையில் வன்னிபர்களின் ஆட்சி தொடங்கியது என்றாலும் குளக்கோட்டன் காலத்திற்கு பின்னரும் இங்கு அவை தொடர்ந்திருந்திருக்கிறது எனச்சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

Sunday, February 14, 2010

கோணேசர் கல்வெட்டு


'கோணேசர் கல்வெட்டு' என்கின்ற இந்த வரலாற்று நூல், திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர் இராஜவரோதயம் அவர்களால் 16 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும் , உரைநடைப்பகுதிகளையும் கொண்டமைந்திருக்கிறது.

Monday, June 29, 2009

திருமலை இராஜ்ய மன்னராக்கப்பட்டவரின் பெயர் தனி உண்ணாப்பூபால வன்னிபம்


ஆதியில் வாயுதேவனால் பறித்து வீசப்பட்ட கைலைமலைச் சிகரங்களில் ஒன்றே திருக்கோணமலை என்பதை வரராமதேவ சோழன் அறிந்தான். இம் மன்னன் முக்கிய கட்டிடப் பொருள்களுடன் சோழநாட்டில் இருந்து திருக்கோணமலை வந்து, தங்கி, சுவாமி மலையில் கோணேஸ்வர ஆலயத்தை அமைத்து வழிபாடு நடைபெற எல்லா ஒழுங்குகளையும் செய்துவிட்டு அரசன் நாடு திரும்பினான். அரசனின் குமாரன் குளக்கோட்டன் தந்தையைப் போல் தானும் சிவாலயங்களை அமைக்க வேண்டும் என்ற மேலான எண்ணமுடையவன்.

Friday, May 15, 2009

திருக்கோணமலையின் தெய்வீகச் சிறப்பு

திருமலை
இந்த நில உலகத்தில் உச்சமான உயரத்தில் சிவபிரான் உமாதேவியோடு உறையும் மகா மலைத்தலம் கைலாயம். கடலின் மேல் மட்டத்தில்
இருந்து 22028 அடி உயரத்தில் இமய மலையின் உச்சியில் பார்வதி சமேதரரான சிவபெருமான எழுந்தருளி உள்ள கைலாய மலை உள்ளதென வரலாறு கூறுகின்றது.இறைவன் ஆதிசேடன், வாயுதேவன் இவர்களின் பலப்பரீட்சை காரணமாக கைலாய மலையின் சிகரங்களில் ஒன்றை இலங்கையின் வட கடலில் விழச் செய்து தென் கைலையாகிய திருக்கோணமலை என்ற திருப்பதியை உருவாக்கித் தந்தான் எனப் பக்திபூர்வமாகச் சைவ மக்கள் நினைவு கூருகின்றனர்.